Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
மீசாலை பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவின் வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் 18 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளை மதில் பாய்ந்து உள்நுழைந்த கொள்ளையர்கள் யன்னலூடாக கதவைத்திறக்குமாறு மிரட்டியுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட்டதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து, தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், 4 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .