2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முதல் மாவீரருக்கு சுடரேற்றி அஞ்சலி

Freelancer   / 2023 நவம்பர் 27 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு, இன்றைய தினம் திங்கட்கிழமை ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள சங்கரின் பூர்வீக  இல்லத்திற்கு முன்பாக ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரரின் தாயார், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .