2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு விரைந்துள்ள விசேட வைத்தியக் குழு

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவிவரும் இனங்காணப்படாத காய்ச்சல் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் நிபுணர் குழு ஒன்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த மாவட்டத்தில் பரவி வரும் புதுவித காய்ச்சலினால் 20 நாட்களில் 9 ​பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் காய்ச்சலினால்  பீடிக்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நால்வர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காய்ச்சல் தொடர்பில் எவ்வித தீர்மானத்துக்கும் வரமுடியாது உள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் சுகாதார அமைச்சிடம் அறிவுறுத்தியமைக்கு அமையவே விசேட வைத்திய நிபுணர் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து இது தொடர்பான ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .