2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மோதல்: 10 மாணவர்கள் காயம்

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில், 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று (14) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ். - கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களே படுகாயமடைந்துள்ளனர். 

தொழில்நூட்பக் கல்லூரியில் நேற்று (14) பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வு முடிவடைந்து வெளியில் வந்தவேளை, தொழில்நுட்ப கற்கை நெறியை மேற்கொண்ட மாணவன் மீது, பிறிதொரு கற்கை நெறியை மேற்கொள்ளும் மாணவனொருவன், தலைகவசத்தால் தாக்கியுள்ளான்.

அதனை, சக மாணவர்கள் தடுத்து, தாக்குதலை மேற்கொண்ட மாணவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த மாணவன் மேலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்து வந்து, தொழில்நுட்பக் கற்கை நெறியை மேற்கொண்ட மாணவர்கள் மீது தலைக்கவசம், தடிகள், கம்பிகள் உள்ளிட்டவற்கைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .