2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழில் சமூகவிரோத செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை வேண்டும்: டக்ளஸ்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். குடா நாட்டில் வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் போன்ற சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துவருகின்றதொரு சூழல் தலைத்தூக்கியுள்ளது. நீண்டகால யுத்த பாதிப்பில் இருந்து மீண்டுவரும் எமது மக்கள் மத்தியில் இச்சம்பவங்கள்; பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தி, அமைதியான சூழலைப் பேண உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

சட்டம், ஒழுங்கு விவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடமே மேற்கண்டவாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த டக்ளஸ்,

யாழ். குடா நாட்டில் மிகவும் உக்கிரமடைந்திருந்த இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள், அண்மைக்காலமாக சற்று குறைந்திருந்தபோதிலும் இப்போது மீண்டும் அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே அவதானிக்க முடிகிறது.  இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். எனினும், அதிகரித்துவரும் வன்முறைச் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது பொலிஸாரின் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.  

எனவே, இவ்விடயம் தொடர்பில் கூடிய அவதானமெடுத்து, இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும் இவை தொடராதிருக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் அவசியம். 

அதேநேரம் இச்செயற்பாடுகள் எமது சமூகத்தில் நிகழாதிருக்கும் வகையில் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களை பொலிஸார்,  சமூக ஆர்வலர்கள், சமய மற்றும் சமூகத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள் உட்பட அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X