2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

யாழில். காதலியையும், தாயையும் வெட்டிய இளைஞன் தற்கொலை?

Freelancer   / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில் நேற்றைய தினம் அதிகாலை இளைஞன் ஒருவர் தனது காதலியையும், காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞனும் அப்பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் , காதலியின் வீட்டுக்குச் சென்று மறைந்திருந்த இளைஞன் , வீட்டார் காலை வீட்டின் கதவை திறந்த போது , வீட்டினுள் நுழைந்து , காதலியையும் , அவரது தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் வெட்டு காயங்களுடன் காணப்பட்ட தாயையும் மகளையும் மீட்டு , வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அந்நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த காணி ஒன்றில் காதலியை வெட்டியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் தனது உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X