2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 20 இளைஞர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள திர்மானம்

Freelancer   / 2023 டிசெம்பர் 23 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிராக பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது , போதைப்பொருளை கடத்தியமை , ,  உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 100கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும் , கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும் மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவ்வாறு கைதானவர்களில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸ் விசாரணைகளின் போது , கண்டறிந்துள்ளோம். அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றம் ஊடாக போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X