2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழில் இளைஞன் கைவிலங்கிட்டு கடத்தல்

எம். றொசாந்த்   / 2017 நவம்பர் 30 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைகழகத்துக்கு முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் இளைஞர் ஒருவர், சிவில் உடை தரித்த குழுவினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த வீதி வழியாக 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை, அவரைப் பின்தொடர்ந்து பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய சிவில் உடை தரித்தவர்கள், இளைஞனை, மோட்டார் சைக்கிளில் இருந்து தள்ளி விழுத்தி, பின் புறமாகக் கைவிலங்கிட்டு, முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்.பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களைத் தொடர்புகொண்டு கேட்ட போது, தாம் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X