Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜனவரி 15 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.இதன்போது , இளைஞனின் உடைமையில் இருந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , திருட்டு சம்பவங்கள் சிலவற்றுடன் இளைஞனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்தும் இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .