Editorial / 2020 மார்ச் 10 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி, யாழ்ப்பாணம் மாநகர எல்லையில், நாளை (11) முதல் மார்ச் 17ஆம் திகதி வரை, டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய, நாளை (11), யாழ்ப்பாணம் நகரின் ஜே - 73, 74, 76 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் நாளை மறுதினம் (12), குருநகரின் ஜே - 67, 68, 70 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் வௌ்ளிக்கிழமை (13), சகல பாடசாலைகளிலும் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், 14ஆம் திகதி, நாவாந்துறையின் ஜே - 87, 88, 85 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் 17ஆம் திகதி, வண்ணார்பண்ணையின் ஜே- 100, 102, 104 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026