Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி, பருத்தித்துறை சாலை பஸ் சேவை இடம்பெற்றதால், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில், சற்று முன்னர் குழப்பநிலை ஏற்பட்டது.
ஊழியர்களை இடமாற்றக் கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே, குறித்த வழித்தடத்துக்கான பஸ் சேவை இடம்பெற்றமைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், அரச பஸ் சேவைகள் அனைத்தும், இன்று (28) வடக்கில் முற்றாக முடங்கியுள்ளன.
இதனால் யாழ். மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையில், பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் இடம்பெற்ற குழப்பநிலையைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
16 minute ago