2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழ். முஸ்லிம்களுக்கு ‘வீட்டுக்கு வீடு’ வழங்கத் தீர்மானம்

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீளக்குடியேறுகின்ற அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும், அவர்கள் வேறு எவ்விதமான அரச உதவிகளையும் பெற்றிருக்காத சந்தர்ப்பத்தில் “வீட்டுக்கு வீடு” என்ற ஒழுங்கில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படல் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (27) இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பின்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இக்கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, 

வீட்டுத்திட்டங்களை வழங்குகின்ற குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை மற்றும் அவர்களது பொருளாதார நிலைகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. 

முன்வைக்கப்பட்டுள்ள 200 வீட்டுத்திட்டங்களுள் கூடுதலானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்க மட்டத்திலும், சமூக மட்டத்திலும் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். 

வீட்டுத்திருத்தங்களுக்காக 4 இலட்சம் ரூபாய் வரையான உதவித்திட்டங்கள் குறித்தும் பரிசீலிக்கப்படும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X