Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 நவம்பர் 15 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். அரியாலை பகுதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ரயிலுடன் கார் மோதியதில் காரை ஓட்டிச்சென்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தி;ல் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (15) மதியம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள வாகன திருத்தகத்துக்கு காரினை கொண்டு சென்று திருத்தி விட்டு திரும்பும் வழியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .