2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரயிலுடன் வான் மோதி விபத்து; குடும்பஸ்தர் பலி

Freelancer   / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன் 

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில், ரயிலுடன் மினிவான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வியாழக்கிழமை (01) மதியம் நடந்த விபத்தில் அரியாலையை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். 

ஏ.பி. வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், இந்த விபத்து இடம் பெற்றுள்ளதுடன், குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர்.

விபத்து சம்பவத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால், அங்கு குழப்பம் ஏற்பட்டது. 

அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு மேலதிக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .