2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வீட்டுக்கடன் செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ். மாவட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கும் வீடுகளை திருத்தியமைப்பதற்கும் கடனைப் பெற்று உரிய காலத்தில் அவற்றைத் திருப்பிச் செலுத்தாத 10 பேருக்கு எதிராக யாழ்;ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடுகள் அமைப்பதற்கும், வீடுகள் திருத்தியமைப்பதற்கு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டன. குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையில் கடன்கள் வழங்கப்பட்டன.

ஆனால், உரிய காலத்தில் கடனைச் செலுத்தாமல் பலர் காலம் கடத்தி வருகின்றார்கள். இவர்களில் அதிக காலமாக கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 10பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X