2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டு நகைகள் திருட்டு

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பழை, துர்க்காபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் முன்கதவு,  திங்கட்கிழமை (23) பகல் திறக்கப்பட்டு, 6 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர்களான கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டின் முன்கதவைத் திறந்து, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 14 ½ பவுண்கள் நகைகள் திருடப்பட்டுள்ளன. 

வீட்டுக்கு வந்த உரிமையாளர்கள், கதவு திறந்திருப்பதை அவதானித்து உள்ளே சென்று பார்த்த போது திருட்டுப்போன விடயம் தெரியவந்தது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் கைரேகைகளைப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X