2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

Sudharshini   / 2016 மே 28 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இருபாலை கற்பகபிள்ளையார் கோயில் பகுதியில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை (26) உயிரிழந்துள்ளார் என கோப்பாய் பொலிஸார்; தெரிவித்தனர்;.

இருபாலை பகுதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் துஸியந்தி (வயது 32) என்பவரே இவ்வாறு சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் ஆலயத்துக்கு சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே வீழந்து படுகாயமடைந்தார்;.

யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்;.

இதனையடுத்து, மோட்டார்; சைக்கிள் சாரதியினை வெள்ளிக்கிழமை (27) கைதுசெய்துள்ளதாக பொலிஸார்; கூறினர்;.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X