2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விவசாய அமைச்சால் 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் 2015 ஆம் ஆண்டுக்குரிய பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் விவசாய அமைச்சின் அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை (24) பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதி, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சமூக அமைப்புகளை  வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற நிதி ஒதுக்கீடு ஆகும். இவற்றின் அடிப்படையில், அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள், முன்பள்ளிகள், சனசமூகநிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள் போன்றவற்றுக்குக் கணிணிகள், ஒலிபெருக்கி சாதனம், தொலைக்காட்சிப்பெட்டி, சங்கீத உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், பாதணிகள், தளபாடங்கள், நூல்கள் மற்றும் சீமெந்து போன்ற பொருட்களும் தனிப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக தண்ணீர்ப்பம்பி, மீன்பிடி உபகரணங்கள், துவிச்சக்கரவண்டிகள், தையல் இயந்திரங்கள், மரவேலை இயந்திரம், சமையல் தொழில் உபகரணங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

வாழ்வாதார உதவியாக கோழிவளர்ப்பு, நல்லின பசு மற்றும் ஆடு வளர்ப்பில் ஈடுபடுவதற்கான உதவி கோரிய விண்ணப்பங்களில் இருந்து உரிய பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உதவிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .