Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
“வடக்கு மாகாணத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும்” என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போர் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி, வவுனியாவில் பெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவை பிரதானப்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் நடத்தவுள்ளோம்.
வடக்கில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 150 நாட்களையும் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக, 30ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இப்போராட்டத்தில் அனைவரும் ஒன்றினைய வேண்டும்” என்றார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago