2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபையின் நினைவேந்தல் சுடரேற்றி அனுஷ்டிப்பு

George   / 2016 மே 18 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீவன்

வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்;க்கால் கிழக்குப் பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நினைவாலயத்தில்  இன்று புதன்கிழமை (18) காலை 9 மணிக்கு நடைபெற்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், முதலாவது நினைவுச்சுடரை முதலமைச்சர் ஏற்றினார். 

தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் ஏற்றினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X