2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடமராட்சியில் வெடித்தது அடுப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 15 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன் 

வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை  பிற்பகல் 2 மணியளவில் சமைத்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (R) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .