Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
செல்வநாயகம் கபிலன் / 2018 ஜனவரி 29 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அச்செழு பகுதியில் இரவு நேரம் வாளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அச்செழு பகுதியில் நேற்று (28) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் வாள்களுடன் அப்பகுதியில் நடமாடியுள்ளனர்.
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அவர்களை பிடிக்க முற்பட்டபோது, மூவர் தப்பியோடிய நிலையில் இருவர் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 3 அடி நீளமான வாள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இருவரும் அச்செழு மற்றும் சுன்னாகம் பகுதியைச்சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago