2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வாளுடன் நடமாடிய இருவர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2018 ஜனவரி 29 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்செழு பகுதியில் இரவு நேரம் வாளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அச்செழு பகுதியில் நேற்று (28) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் வாள்களுடன் அப்பகுதியில் நடமாடியுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அவர்களை பிடிக்க முற்பட்டபோது, மூவர் தப்பியோடிய நிலையில் இருவர் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 3 அடி நீளமான வாள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் அச்செழு மற்றும் சுன்னாகம் பகுதியைச்சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .