2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வாள் வெட்டில் நால்வர் காயம்

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா, கற்பகபுரம் பகுதியில்  இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கற்பகபுரம் பகுதியில், நேற்று (19) இரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாகி வாள்வெட்டில் முடிந்துள்ளது.

குறித்த தாக்குதலின் போது வாள்வெட்டுக்கு இலக்கான நான்கு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .