Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண விவசாய அமைச்சால் தென்மராட்சியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, சாவகச்சேரி கால்நடை சுகாதார வைத்திய பணிமனையில் நேற்று காலை நடைபெற்றது.
கால்நடை வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் சார்பில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஞா.கிஷோர், சாவகச்சேரி நகரசபைத் தலைவர் திருமதி சிவமங்கை இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பொருள்களை வழங்கி வைத்தனர்.
கோழி வளர்ப்புகு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்கூடு மற்றும் கோழிக்குஞ்சுகளும் கால்நைடை வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பசு மாடுகள் மற்றும் ஆடுகள் என்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .