2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விசேட கலந்துரையாடல்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலையொட்டி, மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அச்சுப் பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோருக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல், மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.ஏ.தர்ஷ பிரவீண தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், வாக்குரிமை, வாக்காளர் பதிவு மற்றும் வாக்களிப்பு போன்றவை தொடர்பாக தெளிவுபடுத்தியதோடு, வாக்காளர்களின் பங்கீடுகள் மற்றும் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் போன்றவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது, பிராந்திய ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .