Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 8ஆம் வழங்கப்படும் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (01) தெரிவித்தார்.
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வரை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (01) தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி நீதவானால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 8ஆம் வழங்கப்படும் என யாழ்.நீதவான் அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
3 hours ago
6 hours ago