2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் அர்ச்சகர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 23 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்னாலைப் பாலத்தில் நேற்று (22) வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பஸ், மோட்டார் சைக்கிள், சைக்கிள் என்பன மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்து விட்டு பாலத்தால் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த அர்ச்சகர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸ{டம் அவரது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போதே அர்ச்சகர் உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X