2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 23 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நகர் பகுதியில் நேற்று (22) இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்.கஸ்தூரியார் வீதியில் நடந்து சென்ற குறித்த பெண் வீதியை கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பயனின்றி பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை இரு இளைஞர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .