2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வெடிபொருட்கள் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

உடையார்கட்டு - குரவில் காட்டுப் பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்​ ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

குரவில் காட்டுப்பகுதியில் போர் நடைபெற்ற காலத்தில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இரணைமடு விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இன்று (25) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய, புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி ஜி.பி.சந்திரபால தலமையிலான பொலிஸ் குழுவினரும், விமானப்படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் பதுக்கு குழி ஒன்றில் புதைக்கப்பட்ட வெடிபொருட்களை மீட்டுள்ளார்கள்.

இதன்போது புறப்ளர் வகை வெடிமருந்து - 05, ரி.56 துப்பாக்கி குழல்கள் – 2, எம்.பி.எம்.ஜி துப்பாக்கி குழல்கள் – 2, மிதிவெடிகள் – 27, கைக்குண்டு வெடிப்பி – 01, ஜெக்கற் – 04, இடுப்பு பட்டி - 2 போன்றன மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிப் பொருட்கள்,  சிறப்பு அதிரடிப்படையினரால் அதே காட்டுப்பகுதியில் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X