2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வேட்பாளர் மீது தாக்குதல்

Editorial   / 2018 ஜனவரி 24 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் உதயசிறி மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.பண்ணை பகுதியில் சுமார் 1 மணி நேரம் தடுத்து வைத்து அச்சுறுத்தி, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் உதயசிறியை மீட்டதுடன் சம்பவம் தொடர்பில் 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .