2024 மே 02, வியாழக்கிழமை

வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை

Freelancer   / 2023 ஜனவரி 18 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில்  கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்றிரவு நீதிபதியின் வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

வேலன் சுவாமி சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .