Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 15 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால், இன்று (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏற்கெனவே, 143 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை, பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளர்களாக இவ்வருடத்துக்குள் இணைத்துக்கொள்வதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை எவ்விதமான நியமனங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை என்று கூறியே, நேற்றைய தினம், மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது, பட்டதாரிகளின் கையெழுத்துகள் உள்ளடங்கிய மகஜர்கள், முதலமைச்சர், ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரூடாக பிரதமருக்கு கையளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .