2025 மே 09, வெள்ளிக்கிழமை

சிறுவன் மீது வல்லுறவு: 17 வயது சிறுவன் கைது

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தங்கொட்டுவ, கொடெல்ல எனும் பிரதேசத்தில் பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோ படத்தினை ஒன்பது வயதுடைய சிறுவனுக்கு காட்டி அச்சிறுவனைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக்; கூறப்படும் 17 வயது சிறுவனை  வெள்ளிக்கிழமை(16) கைதுசெய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 

அதேபிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டின் அயல்; வீட்டில் வசிக்கும் சிறுவனை வியாழக்கிழமை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ள சந்தேக நபர் அச்சிறுவனுக்கு பாலியல் காட்சிகள் அடங்கிய படம் ஒன்றினைப் போட்டுக் காட்டியுள்ளார்.

இவ்வாறு படத்தைக் காட்டிய பின்னர் சந்தேக நபர் தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அச்சிறுவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தங்கொட்டுவ பொலிஸார்  சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

கைதான நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X