2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

17 அரச முகாமைத்தவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கல்

Super User   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்தின் அரச துறையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் 17 அரச முகாமைத்தவ உதவியாளர்களுக்கு நேற்று புதன்கிழமை நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனங்கள் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி ப்ரேம்லால் திஸாநாயக்காவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரச திணைக்களங்களிலுள்ள வெற்றிடத்திற்கேற்ப நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முன்னர் மூன்று கட்டங்களில் தகைமை பெற்ற 121 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X