2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அநுராதபுர பிரதேச செயலாளர் பிரிவுகளில் கரப்பந்து விளையாட்டு மைதானங்கள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                          

2012ஆம்  ஆண்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் துறையினை முன்னேற்றும் நோக்கில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் புதிய கரப்பந்து விளையாட்டு மைதானங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 23 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கரப்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில்  ஏழு மைதானங்கள் பகலிரவு மைதானங்களாக அமைக்கப்படவுள்ளதோடு  இதற்காக தலா எட்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்படவுள்ளது. ஏனைய மைதானங்களுக்காக நான்கு இலட்சம் ரூபாய் வீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X