2025 மே 26, திங்கட்கிழமை

விவசாயிக்களுக்கு மரக்கறி விதைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 1500 விவசாயிகளுக்கு வேள்ட்விஸன் நிறுவனத்தினால் மரக்கறி பயிர்களுக்கான விதைகளும் நெல் விதைகளும் நேற்று புதன்கிழமை மாலை வழங்கப்பட்டன.

அத்துடன், கடந்த வருடம் நெல் விதைத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஐந்து பேருக்கு காசோலைகளும் வழங்கப்பட்டன.

கிராமமட்ட குழுக்களின் தலைவர்களும் அதன் பிரதிநிதிகளும் இதில் பங்குபற்றியதுடன்,  அக்குழுக்களின் அங்கத்தவர்கள் விதைகளினையும் பெற்றுக்கொண்டனர். வேள்ட்விஸன் பிராந்திய அதிகாரிகள், சமுர்த்தி முகாமையாளர், பிரதேச விவசாய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X