2025 மே 26, திங்கட்கிழமை

'மரணங்களில் மூன்றாவது இடத்தில் தற்கொலை சம்பவங்களே உள்ளன'

Super User   / 2011 நவம்பர் 05 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்தில் இடம்பெறும் மரணங்களில் மூன்றாவது இடத்தில் தற்கொலை  சம்பவங்கள் உள்ளதாக வட மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அலவலகத்தின் திட்டமிட்டல் வைத்திய அதிகாரி தம்மிக்க த சில்வா தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடந்த வருடம் மாத்திரம் தற்கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 5,460 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 சத  வீதமானேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவோரை கிராம பகுதிகளிலிருந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்காக போக்குவரத்து செலவாக வருடமொன்றிற்கு சுமார் 110 இலட்சம் ரூபா செலவாகின்றது. அதேபோல் அவர்களுக்கான சிகிச்சைகளுக்காக வருடமொன்றிற்கு 230 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை செலவாவதாகவும் அவர் கூறினார்.

வட மத்திய மாகாணத்தில் இடம்பெறும் உயிரிழப்புகளில் சிறுநீரக நோயாளர்களின் உயிரிழப்பே முதலிடத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X