2025 மே 26, திங்கட்கிழமை

வைத்தியசாலையில் குழந்தைகளை கடத்த முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 06 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் வார்ட் தொகுதிக்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்து, குழந்தைகளை கடத்திச்செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பதில் நீதவான் சஜீவ குணரத்ன உத்தரவிட்டார்.

நேற்று சனிக்கிழமை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் வார்ட் தொகுதிக்குள்  அனுமதியின்றி உட்பிரவேசிக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மேற்படி நபரை வைத்தியசாலை பாதுகாப்புப் பிரிவினர் பிடித்து வைத்தியசாலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த நபர் நேற்றையதினமே  பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன், இந்த  சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X