2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முந்தல் பிரதேச செயலாளராக நபில் நியமனம்

Super User   / 2012 ஜனவரி 03 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

புத்தளம், முந்தல் பிரதேச செயலாளராக ஏ.சி.எம்.நபில் இன்று செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 12 வருடங்களாக முந்தல் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம். ஆர். எம். மலிக், புத்தளம் பிரதேச செயலாளராக இடம்மாற்றம் பெற்றதையடுத்தே நபில் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவர்.

இன்றைய கடமையேற்பு வைபவத்தில் இடமாற்றம் பெற்றுச் சென்ற புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், முந்தல் உதவி பிரதேச செயலாளர் செல்வி பண்டார, அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X