2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ரஜரட்ட மருத்துவபீடத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை: உப வேந்தர்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 09 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹபீல் பரிஸ்)

இன்று நண்பகல் 12 மணியுடன் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை மூடுவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லையென ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் கே.ஏ.நந்தசேன டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டைக் குழப்பிக்கொண்டிருந்தனர். பகடிவதையில் ஈடுபட்டதற்காக 7 இரண்டாம் வருட மாணவர்களை ஜனவரி 3ஆம் திகதி முதல் 5 வாரங்களுக்கு நான் இடைநிறுத்தினேன். இதனைத் தொடர்ந்து இரண்டாம் வருட, முதலாம் வருட மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரித்தனர்.

நான் முதல் வருட மாணவர்களை வகுப்புகளுக்கு செல்லுமாறு கூறினேன். அவர்களுக்கு படிப்பு முக்கியமானதென விளக்கினேன். ஆனால் அவர்கள் எனது வேண்டுகோளை மதிக்கவில்லை. மருத்துவபீடத்தையும் விடுதியையும் மூடவேண்டி வருமென நான் எச்சரித்தேனெனவும்  அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • siraj Monday, 09 January 2012 07:50 PM

    The administration is hampering their own students education by faulse allegations.

    Reply : 0       0

    UMMPA Monday, 09 January 2012 08:05 PM

    இவர்களை அவர்களின் பெற்றார்களை அழைத்து மிகவும் திட்டமாக ஒரு உடன்படிக்கைக்கு வாருங்கள். அத்துடன் இதுசம்பந்தமாக அவர்களிடம் கையொப்பத்தை பெற்றுக்கொள்ளுங்கள்..நமது நாட்டில் இது பெரிய தொல்லை. இவர்களுக்கு தெரியுமா இவர்களின் படிப்புக்கு பெற்றார்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். எனவே , இதுக்கு ஒரே பாதை விண்ணப்பம் செய்யும்போது இந்த கையொப்பம் பெற்றுக்கொள்வதே சிறந்தது. இப்போதைக்கு இவர்களை விட்டுவிடுங்கள், இதை பெற்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X