2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாகன விபத்தில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 27 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ்,ஜூட் சமந்த)


சிலாபம், காக்கப்பள்ளி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த  மூவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வத்தளையில் இருந்து மடு தேவாலயத்திற்கு பக்தர்களுடன் சென்றுகொண்டிருந்த  குறித்த வான் கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி வந்துகொண்டிருந்த  பயணிகள் பஸ்ஸுடன் மோதியதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

வான் சாரதியின் கவனயீனமே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .