2025 மே 24, சனிக்கிழமை

ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை மக்களின் பார்வைக்கு

Kogilavani   / 2012 ஜூன் 27 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டியில், ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையினை பல தசாப்தங்களுக்கு பின் தற்போது பொது மக்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

கோட்டையினை பார்வையிட விரும்புவோர் அடையாள அட்டைகளினை பதிவு செய்த பின் கடற்படையினை சேர்ந்த ஒருவரின் வழிகாட்டலில் கோட்டைக்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுவதாக கற்பிட்டி கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கோட்டைக்குள் சென்றதும் கடற்படையினை சேர்ந்த வழிகாட்டியினால் கோட்டைக்குள் காணப்படும் பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு திமிங்கிலத்தின் எலும்புகள், பழைய பிரமாண்டமான நங்கூரம் உட்பட பல பொருட்களை காணக்கூடியதாக உள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X