2025 மே 24, சனிக்கிழமை

பஸ் பயணிகளிடம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

Super User   / 2012 ஜூலை 08 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (எஸ். எம். மும்தாஜ், ஜூட் சமந்த)

தூர இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பிரயாணிகளிடம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அவரிடமிருந்த 31 போதைப் பொருள் அடங்கிய சிறு பக்கட்டுக்களுடன் புத்தளம் பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளடங்கிய ஒரு பக்கட்டின் நிறை 340 மில்லி கிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.

தூர இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ளும் பஸ் வண்டியில் வடை வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை  பொலிஸார் முதலில் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவரிடமிருந்து போதைப் பொருளடங்கிய பக்கட் ஒன்றினை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது பஸ் பயணிகளிடம் விற்பனை செய்வதற்காக தேவையான போதைப் பொருள் பக்கட்டுக்களை மற்நொரு நபரிடமிருந்து பெற்றுக் கொள்வதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதில் அவரிடமிருந்த 31 போதைப் பொருள் அடங்கிய பக்கட்டுக்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புத்தளம் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X