2025 மே 24, சனிக்கிழமை

இறக்கும்வரை முதலமைச்சராக பதவி வகிப்பேன்: பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க

Super User   / 2012 ஜூலை 15 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாண முதலமைச்சராக நான்; இறக்கும் வரை பதவி வகிப்பேன் என கலைக்கப்பட்ட வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க தெரிவித்தார்.

'மக்கள் என்னுடன் இருக்கும்வரை நான் இறக்கும்வரை முதலமைச்சராக பதவி வகிப்பேன் என அநுராதபுரத்தில் தனது இல்லத்தில் நiபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவிக்கு தன்னுடன் போட்டியிடுவதற்கு தனது கட்சியிலோ எதிர்க்கட்சியிலோ எவரும் இல்லை என அவர் கூறினார்.

'தேர்தலுக்கு அடுத்தநாள் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க, வடமத்திய மாகாண சபையின் முதலமச்சராவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எவரும் அதை மாற்ற முடியாது' என அவர் கூறினார்.

'அடுத்த முதலமைச்சர் பதவி குறித் ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. அச்செய்திகளை எவரும் கருத்திற்கொள்ளக்கூடாது. நான் எப்போதும் முதலமைச்சராக இருப்பேன்' என அவர் கூறினார். (அதுல பண்டார)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X