2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கார் குடைசாய்ந்ததில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்,-அப்துல்லாஹ் 


புத்தளம் நகரில் வேகமாக வந்த காரொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் நகரிலுள்ள கடல் நீரேரியடியிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த இக்கார் கடல் நீரேரியடியில்  குடைசாய்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, தெஹிவளையிலிருந்து புத்தளம் நகரில் திருமண வீடொன்றுக்கு வந்தவர்களின் காரே இவ்வாறு விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X