2025 மே 22, வியாழக்கிழமை

இருவரைத் தாக்கி காயப்படுத்திய உணவக உரிமையாளருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜனவரி 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

நுகர்வோர் அதிகார சபையின் அநுராதபுரம் கிளை பிரதானி உட்பட இருவரைத் தாக்கி காயப்படுத்திய உணவகம் ஒன்றின் உரிமையாளரை
எதிர்வரும் 1ஆம்; திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன நேற்று உத்தரவிட்டார்.

அநுராதபுரம் சிங்க கணு பகுதியில் சுற்றிவளைப்பொன்றில் ஈடுபட்ட வேளையில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் நுகர்வோர் அதிகார சபையின் அநுராதபுரம் கிளை பிரதானி உட்பட இருவரைத் தாக்கி அவர்களிடமிருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் உடைத்த சம்பவம் ஒன்று கடந்த 16ஆம்; திகதி இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X