2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

எந்தகல வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 25 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். சீ. சபூர்தீன்


கெப்பித்திகொள்ளாவ எந்தகல வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி நேற்று முன்தினம் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

வீதிப் போக்குவரத்திற்கு தடைகளை இட்டு இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் வாய்த்தாக்கமும் ஏற்பட்டது.    

தகவல் அறிந்த வடமத்திய மாகாண கூட்டுறவு மற்றும் போக்குவரத்து அமைச்சர் கே.எச். நந்தசேன சம்பவ இடத்திற்கு சென்றதோடு உடனடியாக அவ்வீதியைப் புனரமைக்க நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்துசென்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X