2025 மே 23, வெள்ளிக்கிழமை

'விருதோடை கிராம வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்'

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விருதோடை கிராமத்தின் பிரதான வீதியைப் புனரமைப்புச் செய்வதற்கு  நடவடிக்கைகளை உடனடியாகவே மேற்கொள்வதாக வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை, மின்சக்தி மற்றும் கடற்றொழில் அமைச்சர்  சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார். 

விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை  மாலை இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'குறித்த வீதி மாகாணசபைக்குரிய வீதியாக இல்லாத நிலையில் அது பிரதேசசபைக்குரிய வீதியாக இருப்பதால் இதனை மாகாண சபைக்கு வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தரும் பட்சத்தில்  இவ்வீதியினை புனரமைப்புச் செய்வதற்கு நான் நடவடிக்கை மேற்கொள்வேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X