2025 மே 14, புதன்கிழமை

பொலிஸ் வாகனம் மோதியதில் மூவர் பலி

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர், எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் வாகனம் மோதியமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி, செம்பட்டை எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அத்தியட்சகரின் வாகனமும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மங்களஎளிய மரிச்சிக்கட்டு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிரிமால் மதுசங்க, அகில மதுஷான் மற்றும் திலான் மதுசங்க ஆகிய இளைஞர்கள் மூவரே உயிரிழந்தவர்களாவர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X