2025 மே 14, புதன்கிழமை

கப்பம் பெற முயற்சித்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வீடுகளுக்குத் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு அவர்களிடமிருந்து கப்பம் பெற்றுக்கொள்வதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சந்தேக நபர் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என்று கூறிக்கொண்டு, கப்பம் பெற்றுக்கொள்வதற்கு  முற்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில்  வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர்  முறைப்பாடு செய்துள்ளார். இதனைத்  தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது,  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வென்னப்புவ, பண்டிருப்பு காலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X